கவிதைகள்
-
Jun- 2020 -21 June
கவிதைகள்- ரேவா
கூட்டுப் புழு சொல் மனம் அவிழாக் கிளை பற்றிப் பற என்கிறது வேகம் நிதானம் பற்றும் கிளையால் துளிர்க்கும் மனமாகி அவிழென்கிறது அர்த்தம் இரண்டின் கூடடையும் கனத்தை கணம் கணமாய் நீட்டிக்கிறது காற்று இருப்பதற்கான சாத்தியங்ககளோடு ************ நிழல் அறியும் பொழுது…
மேலும் வாசிக்க -
21 June
கவிதைகள்- கமலதேவி
முரண்களின் சமன் என்றைக்கும் அவள் அன்பை மறுதலிப்பவளாகவும், அன்பை யாசிப்பவளாகவும், திருகி நிற்கிறாள். நோக்கி வரும் அன்பை திருப்பிவிடும் காயங்களுடன் அந்த ஆட்டிடையனின் மடியின் கதகதப்பில் சயனிக்கும் ஆட்டுகுட்டி. அன்பின் காயங்களை அறிந்தவனின் தொடுகையில் மீள்கிறது அவள் திருப்பியனுப்பிய அனைத்தும். ***********…
மேலும் வாசிக்க -
20 June
மதுரா- கவிதைகள்
ஊசலாடும் நினைவுகள் 1. நிச்சயமில்லாத நாட்களை நோக்கிய நீண்ட பயணத்தில் நிகழ்தகவாய் கட்டங் கட்டுகிறது வாழ்க்கை.. சிலருக்கு வலியும் சிலருக்கு வரமுமாய். வெற்றியோ தோல்வியோ வினைகளுக்கான விளைவுகளாய் முற்றி முதிர்ந்தபின் ஊசலாடும் நினைவுகளோடு ஒவ்வொன்றாய் உதிரப்போவது நிச்சயம். நன்மரத்தின் இலையாய் துளிர்த்த…
மேலும் வாசிக்க -
20 June
கவிதைகள்- மித்ரா அழகுவேல்
அடேய் மார்க்!!! முகஞ்சுழித்துக் கொண்டே முகநூல் வருகிறார் எதன்மீதும் பற்றற்ற எதன்மீதும் அன்பற்ற எதனோடும் ஒட்டாத பயனர் ஒருவர் அவரின் நகையுலர்ந்த இதழ்களில் வரிவரியாய் வெடித்து நிற்கிறது விரக்தி அன்பு வறண்ட மனங்கொண்ட விரலில் செதில்செதிலாய் பிளந்து விரிகிறது வெறுப்பு பாரபட்சம்…
மேலும் வாசிக்க -
20 June
ஆன்டன் பெனி- கவிதைகள்
96 ஜானு சென்ற சிங்கப்பூர் விமானம் சற்றுமுன் தரையிறங்க அழைக்க வருவதாகச் சொன்ன கணவனைத் தேடிக் கண்டதும் காரில் ஏறினாள் அதிலும் ராம் இல்லை. அவளின் சென்னைப் பயணமோ பழைய மாணவர் சந்திப்பின் நிகழ்வுகளிலோ அவசியமில்லாதவன் அவள் இல்லாத நாட்களின் அலுவலகக்…
மேலும் வாசிக்க -
20 June
திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்- கவிதைகள்
என்பத்தி எட்டு ரூபாய்… சொச்சம் இந்த முப்பது ஆண்டுகளில் முப்பதாயிரம் முறை சூரியனை வலம் வந்து சலித்த என் பூமியின் விரலையும் உதட்டையும் சேர்த்து சுடுகிறது ஒட்ட இழுத்த பீடி மதுக்குப்பியின் பிட்டத்தை தட்டி தலையைத்திருகும் நுட்பத்திற்கு அவகாசமில்லை பொறித்த கோழித்துண்டங்களையோ…
மேலும் வாசிக்க -
20 June
சுபா விஜய்- கவிதைகள்
உயிரே எப்போதிருந்து எனது உயிர் கலந்தாய்… தேவ தூதம் பேசும் நாயகனே… நீ நான் பேதம் அறியவியலா இவ் வேதனைக்கு என்ன பொருள் சகா… சுயத்தின் மீது சாரல் சிந்தும் உனது அன்பு மண்வசமாய் மனதை விழுங்குகிறது… மௌனமாய் அகம் நிறைக்கும்…
மேலும் வாசிக்க -
7 June
கவிதைகள்- இயற்கை
தனிமைக் காலம் i) செங்கால் நாராய் செங்கால் நாராய் எத்திசையில் மகிழம்பூக்களைத் தேடித் தேடி ஒருவன் மருகி முத்தமிடுகிறானோ எத்திசையில் தாழை மடல்களைக் கொண்டொருவன் தனிமைக்குக் காவல் அமைக்கிறானோ எத்திசையிலொருவன் ஒரு மீத சேலையைப் போர்த்திக்கொண்டு கண்ணயர்ந்திருக்கிறானோ தயங்காமல் அவனருகில் செல்…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- கண்டராதித்தன்
வளர் இளம் பருவம் நெகுண்டுயர்ந்த இளம் பெண்கள் இருவர் விளையன் தோட்டத்தில் இடும்பன் பூசைக்கு பத்திர இலைகளைக் காவிக்கொண்டிருந்தார்கள் சுற்றிலும் நல்லது கெட்டது குறித்த அம்மாவின் சொலவடை காட்டுச் சில்வண்டைப்போல பம்மிக்கொண்டிருந்தது நல்லது நமுட்டுச் சிரிப்போடு குறுக்கும் நெடுக்குமாக கடந்தது ஒருத்தி…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- சௌவி
உதிரும் இலை மேய்ந்துவிட்டு வந்து வெயிலுக்கு இளைப்பாறிக்கொண்டிருக்கும் மாடுகளின் மேல் உதிர்ந்துகொண்டிருக்கும் வேப்ப மர இலைகளில் ஒரு இலையாக நானிருக்கிறேன் மாடுகள் எழுந்துபோகையில் சில இலைகள் மாட்டின் முதுகிலமர்ந்து மாடுகளோடு போய்விட்டன அந்தியில் கோலம்போடுவதற்காக வாசல் கூட்டுகையில் சில இலைகள் குப்பைகளாகி…
மேலும் வாசிக்க