தமிழ் கவிதைகள்

  • இணைய இதழ் 105

    கிருத்திகா தாஸ் கவிதைகள்

    அவள்* ஒளியென்று தேடிச் சென்று அவள் கண்டடைந்த இருள் இதற்கு முன்பு அவளுக்குப் பழக்கப்பட்டதாய் இல்லை இரண்டு புள்ளிகளுக்கும் நீண்ட ஒரு தூரம் இல்லை கடந்து போகப் போக அடையாளங்கள் மறைந்து போகலாம் அழிந்து விடுவதில்லை அச்சத்தின் கண்கள் அவளிடம் சொல்லும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    மதியழகன் கவிதைகள்

    நிர்வாணம் 1 இவர்களை இப்படியே விட்டுவிடுவதெனதீர்மானித்திருக்கிறேன்இந்த வாழ்க்கையில் எனக்கானவேர்களை நான் தேடியதே இல்லைதொலைந்த பருவங்கள்சிறகடிக்கின்றன வண்ணத்துப்பூச்சிகளாகநிசப்தம் மெல்ல முணுமுணுக்கிறதுமெளத்தைக் கலைத்துஎன் உடலெங்கும்காலத்தின் ரேகைகள்பதிந்திருக்கின்றனஒரு பறவையின் சுதந்திரம்அதன் சிறகிலா இருக்கிறது?நீர்ப்பூ எப்போதும்நீர் மட்டத்துக்கு மேலேவந்துவிடுகிறதுநாளை என்பது கூடநேற்றைய தொடர்ச்சிதானே?தற்செயலானதுதான் எல்லாம்அந்த ஆறுதல் வார்த்தையேஇப்போது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கூடல் தாரிக் கவிதைகள்

    நினைவு மரம் அப்பாவின் நினைவால்வைக்கப்பட்டமுற்றத்து மரத்திடம்அம்மா அடிக்கடி பேசிக் கொள்வாள்இலேசாக சிரித்தும்கொள்வாள்எப்போதாவது அதனைப் பார்த்துக்கண்ணீர் சொரிவாள் இன்று காலைவாசலில் நின்றவாறுகொஞ்சம் கொப்பொடித்துக்கொள்ளட்டுமாஎன்றான் எதிர்வீட்டுக்காரன் நல்லவேளைஅம்மா வீட்டில் இல்லை. * பிரியமிகு பூனை நடக்கும் தருணத்தில்சத்தம் எதுவும் எழுப்பாமல்மெல்ல நடக்கின்றனபூனைகளெல்லாம் மியாவ்…என்னும்ஒற்றைச்சொல்பாலுக்கானது மட்டுமல்லஅதன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    செல்வக்குமார் சங்கரநாராயணன் கவிதைகள்

    1 மொட்டை மாடியின்விளிம்பில் ஒரு புறாநின்று கொண்டிருந்தது மறுவிளிம்பில் இருந்த நான்அதை என்ன செய்துகொண்டிருக்கிறாயென வினவினேன்சும்மா வேடிக்கை என்ற பின்என்னைக் கேட்டது தற்கொலைக்குமுயற்சிக்கிறேன் என்றேன். அடுத்த வேளைச் சோறும்அடுக்கு மாடி வீடும்ஆட்கள் சுற்றியும்வைத்துக் கொண்டபிறகும்எதற்குத் தற்கொலை என்றது நான் ஏதோ யோசித்துபதில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    க.மோகனரங்கன் கவிதைகள்

    மாய மலர் எனக்குஎனக்கு என்றுஎல்லோரும்ஓடியோடிசெடி கொடிகளில்பூத்திருந்தையெல்லாம்பறித்துத் தொடுத்துக்கொண்டிருந்தமலர்வனத்தின் நடுவேஒருத்தி மாத்திரம்ஒன்றும் நடவாதது போலதன் வசமிருந்தஒற்றையொரு மலரையும்ஒவ்வொருவருக்கும்ஒரோர் இதழெனபேதமேதுமின்றிபிய்த்து தந்துகொண்டிருந்தாள்.வரிசையில் நின்றுவாங்கிக் கண்ணில் ஒற்றியபடிக்கலைபவர்களை,சிரித்துப் பழகியிராதகடுத்த முகத்தினன் ஒருவன்காட்சிக்கு வெளியேயிருந்துகவனித்துகொண்டிருந்தான்.கடைசியில் அவளதுகையில் எஞ்சப்போவது என்னவோவெறும் காம்பு மாத்திரமேஎன்றவன் எண்ணுகையில்,கவலைப்படாதே என்பதுபோலகரிசனத்தோடு அவனிருக்கும்திசைநோக்கி ஏறிட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    பொன்னந்திப் பூ தாமரை இலைமேல் உருண்டோடும் மனம்இலட்சியங்கள் மொட்டும் மலருமாய்த் தலையாட்டதடாகத்தில் விரியும் உணர்வலைகள்சகதிக்கும்..நீருக்கும்..தவளைக்கும்.. அஞ்சியஞ்சிஆடை நனையாதபடிகரையிலேயே தயங்கித் தயங்கி நின்றுலட்சியத் தண்டைத் தீண்டும் பேராவலோடுமலரின் மகரந்தத்தைவிரலில் பூசிக்கொள்ளும் நாள்எப்போதுதான் புலருமோ? • என்னோடிருத்தல் ஒரு செடியானதுஇன்னும் படரவில்லையென்பதைநினைவூட்டத் தங்கியிருக்கும்சிறு பச்சையமாய்;…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    உமா ஷக்தி கவிதைகள்

    சிந்திய தேநீர்த்துளி ஒரு கோப்பைத் தேநீரும்மிகச் சில நண்பர்களும்இதமான காலையின்இனிமைகூட்ட முடியும்சிந்தப்படும் தேநீர்த்துளிகளில்சொல்லப்படாத கதைகளின்மிச்சத்தை ஈக்கள்மொய்த்துக் கொண்டிருக்கிறதுசுடச்சுட ஒரு சாக்லெட்டொனெட் வாங்கி இரண்டாக வெட்டிசுவையில் திளைக்கிறேன்ருசியில் பாதியேது?மலையேறும் நதிகள் குறித்துவியந்தோகி அவன் பேசியபோதுமூன்றாம் தேநீரை பருகிமுடித்திருந்தேன்எதிர் முகம் பார்க்காமல்மனதுக்குள் அதிரவைக்கும்பாலுவின் புன்னகையால்தான்முன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    இன்பா கவிதைகள்

    அலைகளின் முதுகிலேறும் வீரன் குளிர் மேக நிரைகள்யானைக் கூட்டமென மலையேறும்பெருங்குறிஞ்சியில்மூங்கிலரிசிகள் புன்னகைக்கும்புலியின் உறுமலெனக் கவிதையைக் கண்டேன்அதன் கூர் உகிர்கள் பூமியில் பட்டும்படாமல்தாவுவதைப் போல நானும் அதைத் தொடர்ந்தேன்களிறு மிதித்த சிறுபள்ளங்களில் தேங்கிய நீரில்மிதக்கும் வேங்கைப் பூக்களை மெல்ல விலக்கிஅதனைப் பருகும் செந்நாய்களின்மந்திர…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    அமுதசாந்தி கவிதைகள்

    எதை நானும் மறக்க? கண்களில் சில துளிவெறுப்பையாவதுநீ சிந்தியிருக்கலாம்.அதனை ஏந்திக் கொண்டுஎளிதில் கடந்திருப்பேன்.நீயோ நேசத்தையல்லவாநிறைத்து வைத்திருந்தாய்.எப்படி நானும் மறப்பது..உன் மீதான கோபங்கள்கரைந்து வடிந்த பின்எஞ்சிய பேரன்பைவெறுக்கவும் முடியாமல்மறக்கவும் முடியாமல்..தினம் அல்லாடுகிறேன். • நட்சத்திர இரவு பேரண்ட வெடிப்பின்கருந்துளையாககாலத்தை நிறுத்தியும்பின்னோக்கி நகர்த்தியும்விழுங்க காத்திருக்கிறதுநினைவுகள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    ராணி கணேஷ் கவிதைகள்

    ஆச்சியின் பேச்சு அன்றாட வேலைகளுக்கு நடுவேஅலைபேசியில் அழைத்தபோதுஆச்சி பேசிக்கொண்டே இருந்தாள்…முதல் ஐந்து நிமிடங்கள்,‘ஏன் இத்தனை நாளாய் பேசவில்லை,உடம்புக்கு முடியலையா?,அலுவல் அதிகமா?பிள்ளைகள் சுகம்தானே?’என கேள்விகளை அடுக்கிச் சென்றாள்.அதன்பின்னான நிமிடங்களில் தொடர்ச்சியாய்பேசிக்கொண்டே இருந்தாள்…ஆச்சியின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.பாதி அறிந்த விடயங்கள்தாம்,இரண்டு நாட்கள்முன்பே கூறியதை மறந்திருக்கக்கூடும்…என்…

    மேலும் வாசிக்க
Back to top button