சிறுகதை

  • இணைய இதழ்

    வனம் – லட்சுமிஹர்

    வேதன்யம் காட்டினைக் கொண்ட பாப்பநாட்டினில் அமைந்திருக்கும் மாயன் கோவில் அலங்காரம் செய்யப்பட்ட லைட் செட்களுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. வருடா வருடம் ஜல்லிக்கட்டுக்கு முன் மாயன் காளை கோவிலில் பூஜை செய்வது வழக்கம். அந்த ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை பாலன்தான் பார்த்து வருகிறான். ‘மாடு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கர்மா – ஈப்போ ஸ்ரீ

    அன்று… அப்படி நடக்குமென நான் எதிர்ப்பார்க்கவில்லை! ஆனால் நடந்துவிட்டது… எதிர்பாராமல் நடந்த அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமேயில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. நான் சிறிது கவனமாக இருந்திருக்க வேண்டும். நடந்தது என்னவோ நடந்து விட்டது, இனி அதைச் சரிசெய்ய யாராலும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நம்பிக்கை – கணேஷ் ராகவன்

    கதையை முழுவதுமாகக் கேட்ட மேனேஜர் சுபாஷ் சோபாவிலிருந்து எழுந்து பிரகாசைக் கட்டிப்பிடித்தார். “பிரகாஷ், கதை சூப்பர். இது எவ்வளவு செலவு ஆனாலும் நம்ம பண்ணுறோம்.” சுபாஷின் வாயிலிருந்து பொழிந்த வார்த்தைகள், வாழ்க்கையின் மகத்துவத்தை அவனுக்குள் உணர்ந்தான். சுற்றிச் சுற்றி வந்த தோல்விகளின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அது ஒரு கலை – நித்வி

    சென்னையில் இருந்து மகன் வந்து இரண்டு நாட்கள் ஆகிறது ஆன போதும் மகனுக்கும் மருமகளுக்கும் கறி எடுத்து வாய்க்கு ருசியாக செஞ்சு போட முடியலயே என்ற ஒரு சின்ன வருத்தம் சுந்தரத்திற்கு. மகன் வந்திறங்கிய மறுநாளோ ஆயுத பூஜை அதற்கு அடுத்த…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    வெற்றுப்படகு – காந்தி முருகன்

    கட்டப்பட்டிருந்த கைகளில் கயிற்றின் இறுக்கம் சிறிதும் தளர்ச்சியில்லை. பஞ்சினால் ஆன கயிறாக இருந்தாலும் அக்கயிறு இறுக்கமாகத் திரிக்கப்பட்டு முறுக்கப்பட்டு பலமிக்கதாகத்தான் இருந்தது. கைகள் ஒன்றின் மேலொன்று பின்னிக் கொண்டு வலியை அதிகமாக ஏற்படுத்தியிருந்தன. நரம்புகள் ஒரு சேர புடைத்து தோள் பட்டை…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பிங்க் நிற மயில் தோடு – பிரசாத் ரங்கசாமி

    பூபதிக்கு வழக்கமாக இருபது தேதிக்கு மேல்தான் பற்றாக்குறை வரும். பிப்ரவரி மாதம் வருமான வரி பிடித்து விடுவதால் பதினைந்தாம் தேதிக்குள் சம்பளப் பணம் தீர்ந்து விட்டது. இனி வரும் பதினைந்து நாட்களை எப்படி ஓட்டுவது. யாரிடமேனும் கடன் வாங்க வேண்டிவருமா, இல்லை…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    அலகிலா – பிந்துசாரா

    “கடலுக்குப் போறவங்களுக்கு தான் திரும்பி வருவோமா வரமாட்டோமானு தெரியாது. ஆனால் ஒண்ணு தெரியும், கடல் குடுக்கும்னு. கேட்டது கிடைக்கும். இல்லனா கேட்காதது கிடைக்கும். கடல் எப்பவும் எதையும் குடுக்காம விடாது. இது நம்பிக்கையினும் சொல்லலாம், இல்லைனா ஆசையினும் சொல்லலாம். ஆனால் இந்த…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பொதுக்கிணறு – கா.ரபீக் ராஜா

    தெருவுக்குள் புதிதாக ஒரு வண்டி வந்திருந்தது. அது இயந்திரத்தில் ஓடும் வண்டி என்பதை நம்பமுடியாத அளவிற்கு மாட்டு வண்டியின் நவீன வடிவம் போல இருந்தது. மாட்டுக்கு பதில் முன்னால் ஒரு இயந்திர மோட்டார். அது சரியாக தெருவின் மையத்தில் இருக்கும் ஆலமரம்…

    மேலும் வாசிக்க
  • மொழிபெயர்ப்புகள்

    அன்புள்ள அப்பா – நபநீதா தேவ் சென் (தமிழில் – அருந்தமிழ் யாழினி)

    அது ஒரு மங்களகரமான புதன்கிழமை மாலை. சோமேஷ் காணாமல் போன அன்று அதிர்ஷ்டமில்லாத நட்சத்திரங்களோ, கெட்ட சகுனத்தை காட்டும் நட்சத்திரக் கூட்டங்களோ கூட சொர்க்கத்தில் தென்படவில்லை. அவன் மனைவி இந்திராணி எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டாள் எந்த பிரயோஜனமும் இல்லை. இன்னும்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    வாசனை – பா. ராஜா

    பவித்ராவிற்கு அவனை விடவும் இரண்டு வயது கூடுதல்.ஆனாலும் அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளைக் காதலிக்கத்தொடங்கினான். பவித்ராவின் அப்பா அவளின் சிறுவயதிலேயே ஒரு சாலைவிபத்தில் இறந்துவிட்டிருந்தார். அம்மாவிற்கு அரசுப்பள்ளியில் சத்துணவுப் பிரிவில்பணி. தற்போது வேலைமாற்றம் காரணமாக,  இவர்களின்தெருவிற்கு வாடகைக்கு வீடெடுத்து வந்திருக்கின்றனர். அன்று…

    மேலும் வாசிக்க
Back to top button