வாசகசாலை
-
இணைய இதழ் 104
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
பிரார்த்தனை எலும்பெல்லாம் சரியாக வெந்திருக்க வேண்டும்கைகூப்பி வேண்டி உறுதி செய்தார்…சொர்க்க ரதத்திற்கு பேரம் பேசாமல்கேட்டதைக் கொடுத்தாயிற்றுமருத்துவமனையின் கடைசிநிமிடங்களில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம்சச்சரவின்றி சுமூகமாக முடிந்ததுஇரவில் வயிறு முழுக்கக் குடித்துவிட்டுஎப்போதும் போல் கத்திவிடாமல்மாலையிட்ட போட்டோ முன்பு அமர்ந்துமௌன அஞ்சலிஎல்லாம் சரிதான்…உயிரோடு இருந்தபோதும் கொஞ்சம்வாழ்ந்திருக்கலாம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
ஊன்சோறு – ஜே.மஞ்சுளாதேவி
தமிழ் இலக்கிய உலகில் பெண் எழுத்தாளர் விலாசினியைத் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவரே தன்னைப் பெண் எழுத்தாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டால் பிரச்சனை இல்லை. வேறு யாராவது, அதிலும் ஆண்கள் யாராவது சொல்லிவிட்டால் அவர்கள் காதில் இரத்தம் வந்துவிடும். ”எழுத்து என்பது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உருவம் தேடிய நரி – மீ.மணிகண்டன்
சூரியன் உச்சியில் வலம் வரும் வேளை. நரி ஒன்று பக்கத்துக் காட்டிற்கு நண்பனைக் காண நடந்து சென்று கொண்டிருந்தது. வெயில் தந்த சூட்டில் வெகுநேரம் நடந்த காரணத்தால் நரிக்கு தாகம் நாவை வரட்டியது. நடை தளர்ந்து கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. வழியில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 103
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரைக்கு சித்தம் கலங்கிய பொழுது – பாலைவன லாந்தர்
”நீ யாருப்பா புதுசா இருக்கே.. நேத்திக்கெல்லாம் ஒன்னிய பாக்கலயே ஊருக்குப் புதுசா இல்ல ஏரியாவுட்டு ஏரியா வந்திருக்கியா” “அண்ணே, நான் வேற ஊருண்ணே. இது எந்த எடமுன்னே தெரியலண்ணே.. ராவோட ராவா லாரில ஏத்தி இங்கன எறக்கி விட்டுட்டாய்ங்கண்ணே. ரொம்ப பசிக்குது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 103
எலிகள் – ஹேமா ஜெய்
“என்ன ராஜி வச்சது அப்படியே இருக்கு? உன் பொண்டாட்டி எங்க இதெல்லாம் செய்யப் போறா. இங்க வர்றப்ப சாப்ட்டாதானே உண்டு. நல்லா சாப்பிடு” அத்தை இன்னும் இரண்டு பஜ்ஜிகளை எடுத்துத் தட்டில் நிரப்ப, “அச்சோ வேணாம் அத்தை. இதுவே முடியல” என்ற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 103
ஒன்பதாமிடத்தில் ராஜா – கமலா முரளி
உட்கார்ந்தவாறே நாற்காலியைச் சற்றே பின்னோக்கித் தள்ளி, பக்கவாட்டில் இருந்த அலமாரியில் இருந்து, ஒரு கோப்பைக் கையில் எடுத்தான் மாதவன். ’இன்’ செய்திருந்த சட்டை முழுதுமாக வெளியே வந்து விட்டது. அவன் கேசம் நன்றாகவே கலைந்து இருந்தது. சட்டையின் மடிப்பும் கலைந்து, பேண்ட்டும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 103
மெழுகை உண்டு வாழும் பூச்சிகள் – ரூ
காலையிலிருந்து ஐந்து முறைக்கும் மேல் கண்ணாடியைப் பார்த்து அழகுபடுத்திக் கொண்ட போதிலும் மீசைக்குள் புதைந்து ஒளிந்திருந்த ஒற்றை நரை முடி இப்போதுதான் என் கண்களுக்குப் புலப்பட்டது. கத்தரிக்கோலைத் தேட பொறுமையில்லாமல் விரல்களாலேயே பிடுங்கி எறிந்தேன். மீண்டும் ஒருமுறை தலைவாரிக் கொள்ளலாம் என்ற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 103
பிரிவு – நித்யா
எழுபத்தி இரண்டு வயதான சுகுமாரி தனது புரை விழுந்த கண்களின் வழியே மகன் நடராசனை ஊடுருவிப் பார்த்தார். “என்னது..என்னது.. திரும்பவும் சொல்லு..” என்றார் பொக்கை வாய்ச் சிரிப்புடன். ஐம்பது வயதான அந்த நடராசன் அசடு வழிய அம்மாவைப் பார்த்து புன்னகைத்தார். “வந்து..கொஞ்ச…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 103
பஷீரின், ‘காதல் கடிதம்’ – செ.மு.நஸீமா பர்வீன்
வாசிப்பு உண்டாக்கிய பரவசத்தை எழுதிக் கடந்துவிடுதல் வரலாற்றின் முதுகில் வலுக்கட்டாயமாக ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மறுக்கும் இலக்கியவாதிகளிடையே வரலாற்றைத் தன் தோளில் சுமக்கும் காலத்தால் அழியாத படைப்பாளுமைகளில் பஷீர் ஒரு கால வரலாறு. காலம் அவர் எழுத்தைக் கடந்து செல்ல…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 103
எட்வர்ட் மூங்க்கின் அலறல் – சரத்
‘அது, சூரியன் அஸ்தமிக்கும் வேளை. நான் என்னுடைய நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தீடீரென வானம், ரத்த சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. நான் நடப்பதை நிறுத்தினேன். என்னைச் சுற்றிய உலகம், உருமாறிக் கொண்டே இருந்தது. மேகக் கூட்டங்கள், அதன் பெரிய…
மேலும் வாசிக்க