கவிதைகள்
-
Jan- 2025 -16 January
வளவ.துரையன் கவிதைகள்
வருணதேவன் வாய்திறந்து கொட்டுகிறானேவழியெங்கும் வெள்ளமாய். வாடும் பயிருக்குத்தனைவிட்டால் யாருமில்லைஎன்றெண்ணி அவ்வப்போதுமறக்காமல் பெய்கிறதுஇந்த மாமழை. இதுபோன்று பெய்தால்இனியதுதான்.விரைவில் நின்றுவிடும். தூளியை ஆட்ட ஆட்டத்தூங்காமல் சிணுங்கும்சிறு குழந்தையாய்வரும் தூறல்கள்தாம்எப்போதும் தொல்லை ஒதுங்கவும் இடமின்றிஓடவும் இயலாமல்ஒண்டிக்கொண்டுஅல்லல்படும்நொண்டி ஆட்டுக்குட்டிதான்கண்முன் நிற்கிறது. *** சிரிப்பு என் அம்மா அதிகமாகச்சிரிக்கமாட்டாள்…
மேலும் வாசிக்க -
4 January
கூடல் தாரிக் கவிதைகள்
நினைவு மரம் அப்பாவின் நினைவால்வைக்கப்பட்டமுற்றத்து மரத்திடம்அம்மா அடிக்கடி பேசிக் கொள்வாள்இலேசாக சிரித்தும்கொள்வாள்எப்போதாவது அதனைப் பார்த்துக்கண்ணீர் சொரிவாள் இன்று காலைவாசலில் நின்றவாறுகொஞ்சம் கொப்பொடித்துக்கொள்ளட்டுமாஎன்றான் எதிர்வீட்டுக்காரன் நல்லவேளைஅம்மா வீட்டில் இல்லை. * பிரியமிகு பூனை நடக்கும் தருணத்தில்சத்தம் எதுவும் எழுப்பாமல்மெல்ல நடக்கின்றனபூனைகளெல்லாம் மியாவ்…என்னும்ஒற்றைச்சொல்பாலுக்கானது மட்டுமல்லஅதன்…
மேலும் வாசிக்க -
Dec- 2024 -18 December
சந்திரா மனோகரன் கவிதைகள்
வில்லிடுதல் மிளிரும் நட்சத்திரம் அவன் காலுக்கடியில்எப்படி ஒளிரும் என்ற கேள்வியோடுகண் சிமிட்டி சிமிட்டிப் பார்த்தவன் கால்கள்ஒரு வட்டத்திற்குள் சிலந்தி போல் சிக்கிக்கொண்டன ஒடிந்து சாயும் செடி போல் அவள் எழும்பி இருந்தாள்ஆரவாரமற்ற அவள் தோற்றத்தில்அவன் தயக்கம் தகனம் ஆயிற்று ஆற்றங்கரையிலும் கடலோரத்திலும்நிமிர்ந்த…
மேலும் வாசிக்க -
18 December
இரா.மதிபாலா கவிதைகள்
சேதி கேட்டு அதிர்ந்துமெய் பார்த்துபெருந்தீ கண்ணுற்றுதிரும்புகையில்நீர் குளித்த வீட்டில்சின்னஞ்சிறு சுடராகிநின்று விடுகிறதுவாழ்வு. காலம் அமைதியில்உறங்குகிறது புழக்கடையில்கதாபாத்திரங்கள்எதிரொலிக்கின்றனவாழ்ந்த வாழ்வினை. காலக் குளத்தில்பேரமைதியோடுவிழுகிறது கல். அடர்ந்த மனசின்கீழ்வாரத்தில்பட்டென சிறு ஒசை. இப்போதுதான்பறந்திருக்கிறது பறவை. இறகில் இருந்ததுஎழுதி வைத்தஉயிர்க்குறிப்பு. பெருங்கல் போர்த்திபடுத்துக் கிடப்பதெனஅவதி. குறுஞ்சொல் கூடகிடைக்காத…
மேலும் வாசிக்க -
18 December
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
பிரார்த்தனை எலும்பெல்லாம் சரியாக வெந்திருக்க வேண்டும்கைகூப்பி வேண்டி உறுதி செய்தார்…சொர்க்க ரதத்திற்கு பேரம் பேசாமல்கேட்டதைக் கொடுத்தாயிற்றுமருத்துவமனையின் கடைசிநிமிடங்களில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம்சச்சரவின்றி சுமூகமாக முடிந்ததுஇரவில் வயிறு முழுக்கக் குடித்துவிட்டுஎப்போதும் போல் கத்திவிடாமல்மாலையிட்ட போட்டோ முன்பு அமர்ந்துமௌன அஞ்சலிஎல்லாம் சரிதான்…உயிரோடு இருந்தபோதும் கொஞ்சம்வாழ்ந்திருக்கலாம்…
மேலும் வாசிக்க -
2 December
அ.ஈடித் ரேனா கவிதைகள்
நியாயங்கள்எடுபடாது என்றுதெரிந்த பின்பேச முடியவில்லைஅருகில்தான் இருந்ததுசொற்கள் நிரம்பிய பை. * அப்பா எப்படிஇருக்கிறார் என்று கேட்கமுடிவதில்லை அப்பா இறந்தநாளிலிருந்து. மரணக் கடலில்கலந்த பின் என்னவாகும்என் நினைவுகளின் நதி? * இட்லிக்கும் சட்னிக்கும்இடையிலான தூரம்தான்உனக்கும் எனக்கும் இரண்டும் ஒன்றையொன்றுஎப்போது வேண்டுமானாலும்கபளிகரம் செய்துவிடலாம் இட்லி…
மேலும் வாசிக்க -
2 December
ஜேசுஜி கவிதைகள்
சூரிய கிரகணம் வேலை நேரம் நெருங்கிவிட்டதெனஅதிகாலை 5 மணிக்குஉறங்கிக் கொண்டிருந்த பகலைஎழுப்பியது இரவு! கண்விழித்த பகல்சந்திரனின் காதுகளில் சொன்னது, “கொஞ்ச நேரம்சூரியனை மறைத்து வையேன்சோம்பல் முறித்துக்கொள்கிறேன்” * மதுரையே மன்னித்துவிடு! அவள்எதிர்பார்த்த பாண்டிய ராஜ்ஜியம்அங்கு இல்லை!பார்த்த எல்லாமும்மாறிப் போயிருந்தது! சத்திரத்தை தேடியவளுக்குஉணவகம்…
மேலும் வாசிக்க -
2 December
செல்வகுமார் சங்கரநாராயணன் கவிதைகள்
சொர்க்கத்திற்குச்சென்றேன்எல்லாமே இருந்ததுகூடவே கண்னைக் கவரும்தங்கக் குளமொன்றும் தங்கக்குளமொன்றின்மத்தியில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள் முதலாமவர் தன்னைச் சிவனென்றார்இரண்டாமவர் தன்னை இயேசுவென்றார்மூன்றாமவர் தன்னை அல்லாவென்றார்நான்காமவர் தன்னைப் புத்தரென்றார் நான்கு பேரும் என்னை யாரென்றார்கள்மனிதன் என்றேன் அவர்களுக்குள்எந்தப் பிரிவினையும் வரக்கூடாதெனச்சொல்லி வந்தவழி என்னைபூமிக்கு அனுப்பிவிட்டார்கள். *…
மேலும் வாசிக்க -
2 December
ராணி கணேஷ் கவிதைகள்
அம்மாவின் நினைவு(கள்) நாள் 1.வலுக்கட்டாயமாக திசைதிருப்பப்பட்ட மனதுஎங்கெல்லாமோ சுற்றியலைகிறது தன்னந்தனியே‘ஒருநிமிடம் கூட சும்மா இருக்கப் போவதில்லை’‘வெறுமையில் யோசித்து அழப்போவதில்லை‘என்ற வைராக்கியம் எல்லா வேலைகளையும் செய்பித்ததுகாகங்களற்ற ஊரில் எங்கிருந்தோ பறந்து வந்த காகம்வீட்டு முற்றத்தின் முன்னமர்ந்து விளிக்கும் வரையில்உணர்ந்திருக்கவில்லை அம்மாவின் நினைவுகளோடேதான்அந்த நாளினைக்…
மேலும் வாசிக்க -
Nov- 2024 -19 November
செல்வக்குமார் சங்கரநாராயணன் கவிதைகள்
1 மொட்டை மாடியின்விளிம்பில் ஒரு புறாநின்று கொண்டிருந்தது மறுவிளிம்பில் இருந்த நான்அதை என்ன செய்துகொண்டிருக்கிறாயென வினவினேன்சும்மா வேடிக்கை என்ற பின்என்னைக் கேட்டது தற்கொலைக்குமுயற்சிக்கிறேன் என்றேன். அடுத்த வேளைச் சோறும்அடுக்கு மாடி வீடும்ஆட்கள் சுற்றியும்வைத்துக் கொண்டபிறகும்எதற்குத் தற்கொலை என்றது நான் ஏதோ யோசித்துபதில்…
மேலும் வாசிக்க