கவிதைகள்

  • Dec- 2020 -
    8 December

    சோ.விஜயகுமார் கவிதைகள்

    நாயொன்று  வீட்டின் அருகே வரும்போது என்ன செய்யலாம் அதன் பற்களைக் கண்டு பயப்படலாம் ஓயாது அசையும் அதன் வாலைக் கண்டு சோர்வடையலாம் அதன் கால்களில் காய்ந்த சகதியைக் கண்டு சலித்துக்கொள்ளலாம் குரைக்கிற சப்தத்தை கேட்டு காதை மூடிக்கொள்ளலாம் விரட்டலாம் கல் எறியலாம்…

    மேலும் வாசிக்க
  • 8 December

    யாழ் ராகவன் கவிதைகள்

    எனது வேதனகளை மொழிபெயர்த்து பகர்கிறது அறையின் ஐந்தாவது சுவர் வெறுமையின் கோரம் கடித்த தனிமையின் மீது பீறிடுகிறது ரத்தம் நிகழின் தூக்குமேடையில் பிசுபிசுத்தபடி நிற்கிறது நிர்வாணம் கலையாத நிழல் காலைச் சுற்றி கழுத்தைக் கௌவிய மௌனத்திக்கு குரல்வளைக் குருதிக்கு முன்னேறுகிற அவசரம்…

    மேலும் வாசிக்க
  • 8 December

    இரா.கவியரசு கவிதைகள்

    கறிக்குழம்பு மணக்கவில்லை ————————————————– என்னது கறிக்குழம்பு தயார் செய்யும் போது ஊண் உருகும் நெய் மணக்கவில்லையா ? நாசிகளே நீங்களாகவே குதித்து உடைந்து விடுங்கள் பிடுங்கி எறிந்தால் அவமானமாகிவிடும் திடீரெனக் கதவடைப்பது உங்களுக்குப் பழக்கம் இல்லையே வாசனைக்கால்களை கழற்றிவைத்துவிட்டு உள்நுழையும் மூச்சுக்குத்…

    மேலும் வாசிக்க
  • 8 December

    ஸ்ரீதர்பாரதி கவிதைகள்

    அன்பிற்கும் உண்டோ  அடைக்கும் தாழ் ———————————— மணலோடும் ஆற்றுக்குள் நாணற்பூக்கள் திரட்டி சேடிப்பெண்ணாக வெஞ்சாமரம் வீசுகிற இடையன் மகனுக்கு ஈடாக என்ன தருவது? அந்திச்சூரியனை இழைத்து பிறைநிலவை பெயர்த்து வைத்து கிரீடமொன்று பரிசளிக்க லாம். *** தேநீர் நிலையத்தின் பண்பலைப்பாடல் —————————————————————–…

    மேலும் வாசிக்க
  • 8 December

    க.ரகுநாதன் கவிதைகள்

    பூனைகளைப் பிடிப்பதில்லை அல்லது நாய்களைப் பிடிக்கும் மென்மயிர்க் காலினுள் உகிர் புதைந்த பூனைகளைப் பிடிப்பதில்லை. அல்லது நகங்களால் கீறத் தெரியா நாய்களைப் பிடிக்கும். நினைவில் உத்தியுள்ள மிருகம் பூனை. லாவகம் நிறைந்த அது அலட்சியத்தின் உருவகம். வாசலை விட சாளரங்களே பூனையின்…

    மேலும் வாசிக்க
  • 8 December

    குதிரைக்காரன் கவிதைகள்

     [ மு  ] எனது முலையின் மீது அவன் கண்கள் அதை அப்படியே எடுத்து வந்து விட்டேன் . அவனது கண்கள் இனியெப்போதும்  நள்ளிரவையே காணும். தலையறுக்கப்பட்டப்பட்ட பறவையினுடையதைப் போல் பட படவென அடித்துக்கொண்டேயிருக்கின்றன அவன் இமை மயிர்கள்.    [ க  ] அமைதியான நள்ளிரவுகளில் யாரோ வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டு  நெடுநேரம் நிற்கிறார்கள். அம்மா எழுந்து  திறக்க வருவதற்குள் போய்விடுகிறார்கள். நள்ளிரவில் இன்றும் தட்டக்கூடுமென தாழ்ப்பாளின்  அருகிலேயே தயாராயிருக்கையில் அன்றவர்கள்…

    மேலும் வாசிக்க
  • Nov- 2020 -
    10 November

    குமரகுரு கவிதைகள்

    உவர்ப்புக் கடல் பறவைகளின் கண்ணீர் சிந்தி உவர்த்த கடலின் பரப்பில் மிதந்தபடி பறக்கும் பறவையின் நிழல்களைக் கிழித்தெழும்பும் டால்ஃபினின் நிழலாக ஒரு மேகம் தவழ்கிறது! வானத்துக்கும் கடலின் நீர்ப் பரப்புக்கும் மத்தியில்தான் மனிதர்களை விழுங்கிய கடல் தளும்பிக் கொண்டிருந்தது. தோல்விகளை சுமந்தபடி…

    மேலும் வாசிக்க
  • 9 November

    விக்டோரியா சேங் கவிதைகள்; தமிழில் – அனுராதா ஆனந்த்

    இரங்கல் அறிவிப்பு ( கவனிப்பாளர்) ———————————————————— 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015,2016, 2017 ஆம் ஆண்டுகளில் வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்பாளர்கள் இறந்து போனார்கள். ஒருவர்  அவருடைய கணவன் ஜெயிலுக்குப் போன பின் வரவேயில்லை. ஏனையவர்கள்…

    மேலும் வாசிக்க
  • 9 November

    க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்

    உப்புக் கண்டங்களுக்கும் நினைவிருக்கும்… பர்தாவினுக்குள் நுழைந்துவிட்ட சகோதரிகளோடு மூன்றாவதாய் அமர்கிறேன் அவர்களிடம் திராட்சைப்பழங்கள் கொறிப்பான்களாக ஒருவர் கை ஒருவராக மாறிக்கொண்டேயிருக்க வாப்பா பின்னிருந்து குரல் கொடுக்கிறார் பெரிய ஹூசைபா..என்றவாறே ஒவ்வொரு உருண்டையாகத் தோன்றிய திராட்சைப் பழங்களுக்கிடையே ஓரத்திலமர்ந்திருக்கும் என்னை இடித்துத் தள்ளிவிடப்…

    மேலும் வாசிக்க
  • 9 November

    மதுரா கவிதைகள்

    உடைந்து குறுகி மௌனச் சிறையிட்டு உட்புறம் தாழிடுகையில் காற்றும் நுழையாமல் காதுகளையும் மூடித் தொலைக்கிறேன். கழுத்தறுபட்டுக் கதறிக் கொண்டிருக்கும் நியாய தர்மங்களின் விசும்பல் இன்னும் நின்றபாடில்லை. மோனத்தவத்தால் முடிவேதும் வரப்போவதில்லை… மனசுக்கு மரத்தோல் போர்த்தி மீண்டும் மௌனம் துறக்கிறேன். முன் நிற்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button