சிறுகதைகள்

  • Oct- 2024 -
    6 October

    உடனுறைவு – கா. சிவா

    வெறுமை பெரும் போர்வையென என்மேல் கவிந்தது. மென் துகிலால் ஆனதாக இருந்த அப்போர்வை மெல்ல மெல்ல எடை கூடி எடைமிக்க உலோகத்தால் ஆனதாக மாறி அழுத்தியது. கதறி அழுவதற்கான வேட்கை என்னுள் எழுந்தது.    ஆண்டிற்கு ஒரு வாரம் மட்டும் பார்க்கவேண்டிய…

    மேலும் வாசிக்க
  • 6 October

    உருத்து – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்

    இருளுக்கும் அமைதிக்குமான காதலைக் கரைத்துக் கொண்டிருந்த சுவர்க்கோழியின் ஒப்பாரி அதன் இணைக்குக் கேட்டதோ யில்லையோ, இடிந்துபோயிருந்த தவமணி வீட்டாளுகளுக்கு புத்திக்கு எட்டாமல் காதுகளில் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தது. பொழுதிருட்ட வேடிக்கைக்கும் விலக்கி விடவும் கூடிய கூட்டமெல்லாம் ஒன்றும் இரண்டுமாய் கலைந்துபோக சாமமிரண்டு…

    மேலும் வாசிக்க
  • 6 October

    ஊற்று – ந.சிவநேசன்

           இந்த இருட்டில் தன்னை எழுப்பி அப்பா எங்கே அழைத்துப் போகிறாரென அவனுக்குத் தெரியவில்லை. கதவருகில் போய் அம்மாவைப் பார்த்தான். அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். இருவரும் வெளியே வந்து கதவை சும்மா சாத்திவிட்டு நடந்தோம். வழக்கம் போல உடன் வரத் தயாராக…

    மேலும் வாசிக்க
  • 6 October

    ஊழடி முட்டம் – ஜெனார்த்தன்

    1  அவள் கட்டிலில் இருந்து அம்மணமாக குதித்து ஓலமிட்ட படியே அறையை விட்டு ஓடினாள். அடுத்த நாள் இராத்திரிப் பொழுதில் அந்த வீட்டிலிருந்து தப்பித்துப் போய் மெல்போர்ன் நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று கொண்டு தன் கைப்பேசியில் யாழ்ப்பாணத்திலுள்ள சிவானுஜனுக்கு…

    மேலும் வாசிக்க
  • 6 October

    ஆகரம் – சுதர்சன்

    காலை ஏழு மணி வாக்கில் வீட்டில் யாரும் இன்னும் கண் விழித்திருக்கவில்லை. எனக்குத் தூக்கம் தெளிந்துவிட்டிருந்தது. தலைமாட்டில் இருந்த செல்ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வந்து டிவியை உயிர்ப்பித்து, இருபத்திநாலு மணி நேரம் பாடல்கள் ஒளிபரப்பும் சேனல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து…

    மேலும் வாசிக்க
  • 6 October

    அப்பிராணி – ரம்யா அருண் ராயன்

    கடல் கிட்டத்தட்ட ஐம்பது அடி அளவுக்கு உள்வாங்கியிருந்தது. கோவிலுக்கு முதுகையும், கடலுக்கு முகத்தையும் காட்டியபடி அமர்ந்திருந்த கற்குவேல், எழுந்து தன் காவி வேட்டியின் மணலை உதறிக் கொண்டான். உள்வாங்கிய கடற்கரையில் பாசிபடிந்த பாறைகள் மணல்திட்டுகளுடன் தெரிந்தது ஒரு நவீன ஓவியம் போன்றிருந்தது.…

    மேலும் வாசிக்க
  • 5 October

    காலச் சுமைதாங்கி – உஷாதீபன்

    அறையின் மின் விசிறியை அணைத்து விட்டு ஜன்னலருகே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார் காமேஸ்வரன். இது போதுமே..! என்றிருந்தது மனசுக்கு.           ஏம்ப்பா…ஃபேனைப் போட்டுக்க வேண்டியதுதானே…? என்றவாறே சுவிட்சைத் தட்டப் போனான் சிவா.           ம்ம்ம்….போடாதே….உடம்பெல்லாம் எரியறது ஃபேனுக்கடிலயே உட்கார்ந்திருந்தா…! மாடி ஹீட்டை…

    மேலும் வாசிக்க
  • 5 October

    எபேசியர் 4:32 – சிவசங்கர்.எஸ்.ஜே

    பெருநீலம் தன்போக்கில் நுரைகளை உற்பத்தி செய்துகொண்டேயிருந்தது. ஏதோவொரு விசை அதை இயக்குவதுபோல. அத்தனை இயக்கத்திலும் ஓர் அமைதி. சற்றுத் தள்ளிப் போனால் இந்த நீலம் அமைவதில்லை. கடும் மாசு. சில இடங்களில் நீலம் கருப்பாகி நாற்றமடிக்கத் தொடங்கியிருந்தது. உப்பு வாசனையோடு எழும்…

    மேலும் வாசிக்க
  • 5 October

    அவள்களின் திருவந்தாதி – புதியமாதவி

    தானாறம் தன்னாறம் அம்மை தானாறம் தன்னாறம் தானாறம் தன்னாறம் – தேவி தானாறம் தன்னாறம் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஆண்டு 40 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் ஆற்றுக்காலில் கூடப் போகிறார்கள். 108 தேவிகளும் இறங்கிவந்து அப்பெண்களுடன் சேர்ந்து செவ்வாடை அணிந்து…

    மேலும் வாசிக்க
  • 5 October

    அவநுதி – மஞ்சுநாத்

    பைரவஜம்பு பள்ளத்தாக்கு மயான அமைதியாக இருந்தது. பைரவஜம்பு இடமே ஒரு மயானம்தான். மயானங்கள் வெளித்தோற்றத்திற்கு அமைதியாகத் தோன்றலாம் ஆனால் அவை அமைதியின் உள்ளீடு அற்றவை. பள்ளத்தாக்கின் விளிம்பில் இட வலமாகச் சுழன்று மேலெழும் காற்றில் லட்சக்கணக்கான உயிர்களின் அலறல்கள் மௌனமாக எதிரொலிக்கும்.…

    மேலும் வாசிக்க
Back to top button