சிறுகதைகள்

  • Oct- 2024 -
    6 October

    டேர் – பத்மகுமாரி

    மதிய வெயில் மேகங்களுக்குள்ளே மறைந்து கிடந்தது. மனோகரி வானத்தை வேடிக்கை பார்த்தபடி மரத்தைச் சுற்றி கட்டிவிடப்பட்டிருந்த திட்டில் வலது காலுக்கு மேல் இடது காலை நட்டனம் கொடுத்து அமர்ந்திருந்தாள். மரத்திற்கு வளையம் கட்டியிருக்கிறார்கள், வேர்களுக்கு? இந்த மரத்தின் வேர்கள் மண்ணுக்கடியில் எந்த…

    மேலும் வாசிக்க
  • 6 October

    டால்ஸ்டாய் பண்ணை – சி.சரவணகார்த்திகேயன்

    லலிதா ஈர்க்குச்சியால் தைக்கப்பட்ட‌ மந்தாரை இலையில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய, பொன் மஞ்சள் நிறம் கொண்ட‌ உருண்டையை ஆர்வமாகவும் ஆசையாகவும் நாவில் எச்சிலூறப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அதைச் சாப்பிடலாமா வேண்டாமா? காந்திக்குத் தெரிந்தால் திட்டுவாரா?’ என்று மனதில் குழப்பம் ஓடிக் கொண்டிருந்தது.…

    மேலும் வாசிக்க
  • 6 October

    டிராயர் உள்ளே ஒரு கவர் – ‘காலச்சக்கரம்’ நரசிம்மா

    அட்டெண்டர் பரசு கையில் கவரை ஆட்டிக்கொண்டு வந்த விதமே, சங்கமேஸ்வரனுக்கு வருவது என்ன என்பது புரிந்து விட்டது. அதோ! அந்த கவரின் உள்ளே, அவரது முப்பத்தைந்து வருட கடும் உழைப்புக்கு மங்களம் பாடும் அறிவிப்பு வந்துகொண்டு இருக்கிறது. கவரைப் பிரிக்கவே வேண்டாம்.…

    மேலும் வாசிக்க
  • 6 October

    உத்தரவு – இராஜலட்சுமி ஆறுமுகம்

    “6 மணிக்கெல்லாம் எல்லோரும் தயாராகிடுங்க.. அப்புறம் அது இல்லை இது இல்லைனு சொல்லிக்கிட்டு ‘லேட்’ பண்ணாதீங்க. நேரத்துக்கு அங்க போய் சேர்ந்தா தான் ‘தோக்கன்’ எண் கிடைக்கும் தெரியும்தானே?’ என அப்பா அம்மாவிடம் காராசாரமாக சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவும், ‘சரிங்க. எல்லாம்…

    மேலும் வாசிக்க
  • 6 October

    உடனுறைவு – கா. சிவா

    வெறுமை பெரும் போர்வையென என்மேல் கவிந்தது. மென் துகிலால் ஆனதாக இருந்த அப்போர்வை மெல்ல மெல்ல எடை கூடி எடைமிக்க உலோகத்தால் ஆனதாக மாறி அழுத்தியது. கதறி அழுவதற்கான வேட்கை என்னுள் எழுந்தது.    ஆண்டிற்கு ஒரு வாரம் மட்டும் பார்க்கவேண்டிய…

    மேலும் வாசிக்க
  • 6 October

    உருத்து – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்

    இருளுக்கும் அமைதிக்குமான காதலைக் கரைத்துக் கொண்டிருந்த சுவர்க்கோழியின் ஒப்பாரி அதன் இணைக்குக் கேட்டதோ யில்லையோ, இடிந்துபோயிருந்த தவமணி வீட்டாளுகளுக்கு புத்திக்கு எட்டாமல் காதுகளில் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தது. பொழுதிருட்ட வேடிக்கைக்கும் விலக்கி விடவும் கூடிய கூட்டமெல்லாம் ஒன்றும் இரண்டுமாய் கலைந்துபோக சாமமிரண்டு…

    மேலும் வாசிக்க
  • 6 October

    ஊற்று – ந.சிவநேசன்

           இந்த இருட்டில் தன்னை எழுப்பி அப்பா எங்கே அழைத்துப் போகிறாரென அவனுக்குத் தெரியவில்லை. கதவருகில் போய் அம்மாவைப் பார்த்தான். அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். இருவரும் வெளியே வந்து கதவை சும்மா சாத்திவிட்டு நடந்தோம். வழக்கம் போல உடன் வரத் தயாராக…

    மேலும் வாசிக்க
  • 6 October

    ஊழடி முட்டம் – ஜெனார்த்தன்

    1  அவள் கட்டிலில் இருந்து அம்மணமாக குதித்து ஓலமிட்ட படியே அறையை விட்டு ஓடினாள். அடுத்த நாள் இராத்திரிப் பொழுதில் அந்த வீட்டிலிருந்து தப்பித்துப் போய் மெல்போர்ன் நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று கொண்டு தன் கைப்பேசியில் யாழ்ப்பாணத்திலுள்ள சிவானுஜனுக்கு…

    மேலும் வாசிக்க
  • 6 October

    ஆகரம் – சுதர்சன்

    காலை ஏழு மணி வாக்கில் வீட்டில் யாரும் இன்னும் கண் விழித்திருக்கவில்லை. எனக்குத் தூக்கம் தெளிந்துவிட்டிருந்தது. தலைமாட்டில் இருந்த செல்ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வந்து டிவியை உயிர்ப்பித்து, இருபத்திநாலு மணி நேரம் பாடல்கள் ஒளிபரப்பும் சேனல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து…

    மேலும் வாசிக்க
  • 6 October

    அப்பிராணி – ரம்யா அருண் ராயன்

    கடல் கிட்டத்தட்ட ஐம்பது அடி அளவுக்கு உள்வாங்கியிருந்தது. கோவிலுக்கு முதுகையும், கடலுக்கு முகத்தையும் காட்டியபடி அமர்ந்திருந்த கற்குவேல், எழுந்து தன் காவி வேட்டியின் மணலை உதறிக் கொண்டான். உள்வாங்கிய கடற்கரையில் பாசிபடிந்த பாறைகள் மணல்திட்டுகளுடன் தெரிந்தது ஒரு நவீன ஓவியம் போன்றிருந்தது.…

    மேலும் வாசிக்க
Back to top button