நாவல்

  • இணைய இதழ் 126

    போர், அமைதி & சந்தை நூல் அறிமுகம் – ஹரிகிருஷ்ணன் வானமாமலை

    கார்ப்பரேட் குருஷேத்திரத்தின் ஒரு கூர்மையான பார்வை    2025 கோவை புத்தகத் திருவிழாவில் யாவரும் பப்ளிஷர்ஸ் ஜீவ கரிகாலனிடம், “ஏதாவது துறை சார்ந்த புத்தகங்கள் இருந்தா சொல்லுங்க, அதை வாசிக்கணும்” என்று கூறினேன். அப்பொழுது அவர் பரிந்துரைத்த புத்தகம்தான், ‘போர் அமைதி & சந்தை’. எப்பொழுதும் கிராமியக் கதைகள், ஒரு குடும்பத்தை பற்றிய கதை, ஒரு தனி மனிதனின் வாழ்க்கைப் பயணம் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதை என்று படித்துச் சலித்த எனக்குப் பெருநிறுவனத்தைப் பற்றிய கதை என்றதும் ஓர் ஆர்வம் வந்தது. அப்படித்தான் இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.  மணி ராமலிங்கம் எழுதிய, ‘போர் அமைதி & சந்தை’ என்ற நாவல், 90களில் இந்தியப் பொருளாதாரத் தாராளமயமாக்கல் மற்றும் கணினிப் புரட்சியின் பின்னணியில் மும்பை மாநகரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஓர் அழுத்தமான படைப்பாகும். இந்நூல் வெறும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வீழ்ச்சியையும் எழுச்சியையும் மட்டும் பேசாமல், அந்தச் சந்தை அமைப்பிற்குள் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் அகப் போராட்டங்களையும், வடுக்களையும், உளவியல் ரீதியான மாற்றங்களையும் மிக நுட்பமாக விவரிக்கிறது. 1960களில் தொழிற்சங்கப் போராட்டங்களால் ஏற்பட்ட ‘லாக் அவுட்’ சூழலையும், 90களில் மூளையை மூலதனமாகக் கொண்டு உருவான புதிய தொழில் சந்தையின் ‘லாக் அவுட்’ சூழலையும் ஒப்பிட்டு, ‘இடம்தான் வேறே ஒழிய அதே குருஷேத்திரம்தான்’ என்ற தத்துவார்த்தப் புரிதலுடன் நாவலை ஆசிரியர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.   நாவலின் மிக முக்கியமான பலம் அதன் பின்னணியாக விளங்கும் பம்பாய் (மும்பை) மாநகரமாகும். விக்டோரியா டெர்மினஸ் (வீ டி) ரயில் நிலையம், உதிரும் காய்கறிகள் போலப் பிளாட்பாரத்தில் இறங்கும் மனிதர்கள், மீன் வாசம், மனித வியர்வை மற்றும் பொதுக் கழிப்பறையின் நெடி என பம்பாயின் அசல் முகத்தை ஆசிரியர் வாசகர்களின் நாசிக்குக் கடத்துகிறார். குறிப்பாக, டி.என். ரோடு (DN Road) பிளாட்பாரக் கடைகள், அங்கு விற்கப்படும் செண்டுகள், புத்தகங்கள் மற்றும் உலகத்தின் அத்தனை உணவுகளும் கிடைக்கும் தெருவோர உணவகங்கள் என அந்த மாநகரத்தின் பரபரப்பான நுகர்வோர் கலாச்சாரம் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதால் நாவலின் ஆரம்பம் முதல் முடிவு வரை பம்பாயின் கூட்ட நெரிசலில் மூச்சு விட முடியாமல் சிக்கிக் கொண்டுள்ள ஓர் உணர்வை வாசிப்பவருக்கு எழுத்தாளர் மிகச் சுலபமாகக் கடத்துகிறார்.  இந்தத் துடிப்பான நகரத்தில் இயங்கி வரும் அனந்தராமனின் மென்பொருள் மற்றும் விளம்பர விற்பனைத் துறை அலுவலகம்தான் கதையின் மையம். ஒரு சிறு விடுப்பு முடிந்து தமிழகத்தில் இருந்து திரும்பும் ரமணி என்ற இளைஞன், திங்கட்கிழமை காலையில் அலுவலக வாசலில் தொங்கும் பூட்டையும், கம்பெனி ‘லாக் அவுட்’ செய்யப்பட்ட அதிர்ச்சிச் செய்தியையும் எதிர்கொள்வதில் இருந்து நாவலின் முதன்மைக் கதை நகர்கிறது. ஆசிரியர் இந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக ஆழமான உளவியல் பின்னணியுடன் வடிவமைத்துள்ளார். ரமணி வேக வேகமாகப் பேசும், மெல்லிய நறுமணங்களை விரும்பும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞன். அவனது நண்பன் சுந்தர், எதையும் நிதானமாகப் பேசும், முகபாவனைகளைக் காட்டாத ஒரு சாதுரியமான விற்பனையாளன். கம்பெனி மூடப்பட்டவுடன் ரமணி எதிர்கொள்ளும் பசியும், வேலை இழப்பு குறித்த பயமும், அவனுக்குள் ஏற்படும் இரத்த அழுத்த நோயின் தொடக்கமும் ஒரு சராசரி நடுத்தர வர்க்க இளைஞனின் பாதுகாப்பின்மையை அப்படியே பிரதிபலிக்கிறது.    ஐஐஎம் (IIM) பட்டதாரியான அனந்தராமன், வெறும் எண்களை மட்டும் நிறுவனமாகக் கருதாமல், மனிதர்களின் கனவுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு லட்சியவாதத் தொழில்முனைவோர். தனது மென்பொருள் நிறுவனத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட போராட்டங்களும், அவரது வழிகாட்டியான ஜம்னலால் கூறிய ‘வியாபாரம் என்பது மாபெரும் மனப்போர்’ என்ற தத்துவமும் அவரது கதாபாத்திரத்திற்குப் பெருமை சேர்க்கின்றன. ஜம்னலாலும் அனந்தராமனும் பேசிக் கொள்ளும் இடம் வாசிக்கும் நமக்கு மிகப்பெரிய உந்துதலைக் கொடுக்கும். விஷ்ணு சேனா அரசியல்வாதி ரானேவின் துப்பாக்கி மிரட்டலுக்குப் பணிய மறுத்து, நிறுவனத்தையே தற்காலிகமாக மூடத் துணியும் துணிச்சல் மிக்கவராக அவர் காட்டப்படுகிறார்.   விளம்பரத் துறையின் தலைவியான ரூபி, அடங்காப் பெண்மையும் ஆளுமையும் நிறைந்த ஒரு நவீனக் கதாபாத்திரம். தன்னுடைய தேவைகளையும் வாழ்க்கையையும் தானே தீர்மானிக்கும் அவளது போக்கு, கார்ப்பரேட் உலகில் அவள் தன் இடத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கிறாள் என்பதைக் காட்டுகிறது. அனந்தராமனுடனான அவளது நெருக்கமான உறவும், நிறுவனத்தின் ரகசியச் செயல்பாடுகளும் கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.   மென்பொருள் பிரிவின் தலைவனான கார்த்திக்கும், அவனுடன் பணிபுரியும் சித்ராவும் நாவலின் மற்றொரு முக்கியப் பரிமாணம். கார்த்திக்கின் அர்ப்பணிப்பும், நிறுவனத்தின் மீதான அவனது ராஜவிசுவாசமும் லாக் அவுட் காலத்திலும் ரகசியமாக ஹோட்டல் அறைகளில் இருந்து நிறுவனத்தை இயக்க உதவுகிறது. சித்ரா அவனோடு நெருக்கமாக இருந்தாலும், ‘லாக் அவுட் முடிவதற்குள் எனக்கு அமெரிக்கப் பையனுடன் கல்யாணம் ஆகிவிடும்’ என்று எதார்த்தத்தைப் பேசும் தற்காலப் பெண்ணாக விளங்குகிறாள்.     கணக்காளரான சுப்பிரமணியன் என்கிற சுப்பு சார், தீபா பாரில் அமர்ந்து கொண்டு சமூக நீதியைப் பற்றியும், தனது கடந்த கால ஜாதி வடுக்களைப் பற்றியும், கார்ப்பரேட் அரசியலைப் பற்றியும், வேலை இழப்பு பயம் பற்றியும் பேசும் ஒரு விரக்தியடைந்த கதாபாத்திரம். அவருடைய புலம்பல்கள் மூலமாக நடுத்தர வயது மனிதர்களின் வேலைவாய்ப்புப் பயமும், எதிர்காலக் கவலையும் வெளிப்படுகின்றன.     நாவல் பேசும் முக்கியக் கருப்பொருள்களில் ஒன்று சந்தையும் அதிகார அரசியல் மிரட்டல்களும். நாவல் 90களின் பம்பாயில் நிலவிய பிராந்தியவாத அரசியலையும், அதன் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களையும் அப்பட்டமாகப் பேசுகிறது. விஷ்ணு சேனாவின் தலைவரான ரானே, அனந்தராமனின் கேபினுக்குள் புகுந்து, துப்பாக்கியால் சுட்டு, மராட்டியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும், கருப்புப் பணப் பங்கைக் கேட்கும் காட்சியும் அன்றைய மும்பையின் நிழல் உலக அரசியலைக் காட்டுகிறது. இரண்டாவது கார்ப்பரேட் நிறுவனங்களின் உயிர்வாழும் தந்திரங்கள். கம்பெனி கதவடைப்புச் செய்யப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இருக்க, ஹோட்டல் அறைகளைத் தற்காலிக அலுவலகங்களாக மாற்றி (அறை எண் 108), ரகசியமாகச் சேவைகளைத் தொடர்வது, பத்திரிக்கைத் துறையைத் தற்காலிகமாகக் குஜராத்திற்கு மாற்றுவது போன்ற கார்ப்பரேட் தந்திரங்களை ஆசிரியர் மிகத் துல்லியமாக விவரித்துள்ளார்.   மூன்றாவதாக, கதாபாத்திரங்களின் அக அமைதியும் புறப் போரும். நாவலின் தலைப்பிற்கு ஏற்ப, ஜம்னலால் அனந்தராமனுக்குக் கூறும் அறிவுரை மிக முக்கியமானது: “வெளியே போரிட உள்ளே நீ மிகப்பெரிய அமைதியாயிருக்க வேண்டும். உள்ளே புத்தனாகவும், வெளியே அலெக்சாண்டராகவும் இருக்க வேண்டும்”. இந்தத் தத்துவமே நாவலின் அடித்தளமாக விளங்குகிறது. ரமணி தன் பயத்தைப் போக்க அவனது ரவி அண்ணாவை நாடுவதும் இந்த அமைதிக்கான தேடலின் ஒரு பகுதிதான்.    அலுவலகத்தில் ரூபி தனது அதிகாரத்தை நிலை நாட்ட கார்த்திக்கை நடத்தும் விதமும் பதிலுக்கு கார்த்திக் செய்யும் மறைமுக வேலைகளும் இதனால் பாதிக்கப்படும் ரூபி கார்த்திகையும் அவனது குழுவில் இருக்கும் அனைவரையும் அவள் பழி வாங்கும் விதமும் ஆபீஸ் பாலிடிக்ஸ் என்றால் எப்படி இருக்கும் என்பதை நமக்குக் காட்டுகிறது. எப்படி அனந்த ராமனுக்கு ஒரு ஜமன்லால் கிடைத்தாரோ அதுபோல் கார்த்திக்கு ஒரு மோதிலால் இருக்கிறார். அனந்தராமனும் கார்த்திக்கும் வேறு வேறு இல்லை. இருவரும் வாழ்க்கை என்னும் கடல் கொண்டு செல்லும் இடத்திற்குப் போகாமல் தாங்கள் விரும்பும் இடத்திற்கு எதிர்நீச்சல் போட்டுச் செல்லும் மன பலம் கொண்டவர்கள்.   மணி ராமலிங்கத்தின் எழுத்து நடை மிக எதார்த்தமானது. பம்பாயின் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த பேச்சு வழக்கு (எ.கா: ‘மங்கிலம்’, ‘தந்தி’) நாவலுக்கு ஒரு தனித்துவமான வாழ்வியல் தன்மையைத் தருகிறது. கார்ப்பரேட் வார்த்தைகளான ‘ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்’…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    ககன வெளி – கலாப்ரியா

    [கவிஞர் கலாப்ரியாவின் புதிய நாவலான ‘ககன வெளி’- இல் இருந்து இரண்டு அத்தியாயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு] 3 ஆறுமுகம் தொங்கிய தலையுடன் வீட்டைப் பார்க்க நடந்தான். அவனுக்கு சின்னப் பிள்ளையிலிருந்தே கூட்டம் என்றால் ஒரு பயம். ஒரு சமயம் அப்பா…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குடக்கூத்து – நாவல் வாசிப்பனுபவம் – கவிஞர் இரா.மதிபாலா

    ஒரு காலகட்டத்தில் மண்ணின் மணம் நிறைந்து வீசிய கிராமப்புறத்து மதிப்புமிகு ‌கலைகள் தற்போதைய காலச்சூழலால் அவற்றின் மீதான தாக்கங்களால் ஏற்பட்டுள்ள நிலையில், கரகாட்டக் கலைஞர்கள் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் நாதஸ்வரம், மேளம் வாசிக்கும் கலைஞர்கள் வாழ்வினை கால வரிசையோடு அந்த கலைகளின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இத்ரீஸ் யாக்கூப்பின் ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் வாசிப்பனுபவம் – ஆமினா முஹம்மத்

    கோரமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நடக்கும் சம்பவங்களும் ஆட்சியதிகாரங்கள் நிகழ்த்தும் ஆதிக்கங்களும் காட்டிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் மாமன் மச்சானாய் மதபேதமின்றி பழகிய மக்கள் கூட்டம் சகஜமாய் நம்மில் இருந்தனர். இப்போதெல்லாம் வேறுவேறு மதத்தைச் சார்ந்தவர்களை நண்பனாக கொண்டிருப்பதே பெரும் சாதனையாக, வியப்புக்குரிய…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    எழுத்தாளர் மாதவராஜின் ‘க்ளிக்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஆமினா முகம்மது

    “எனக்கு உங்க கையெழுத்துப் போட்டுத் தாங்க” என நேரடியாக எழுத்தாளரிடம் அருகில் நின்று வாங்கிய புத்தகம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஓரிரு வார்த்தை கூட பேசாத நிலையிலும் அவர் இயல்பின் மீது மரியாதை கூடியிருந்தது பிரத்யேகக் காரணம்.  ‘க்ளிக்’ – தோழர்…

    மேலும் வாசிக்க
  • Naval

    காலி அடிப் பானை – மு.குலசேகரன்

    (“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்) சுந்தரத்தை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து யாரோ தொட்டெழுப்பியது போலிருந்தது. இன்னும் வழக்கமான அதிகாலையாகவில்லை. சுற்றிலும் பேரமைதி நிலவியது. அதை சிள்வண்டுகளின் ஓயாத இரைச்சல் அதிகப்படுத்தியது. உற்றுக் கேட்டால் அகால பட்சிகளின் அலறல்கள்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வாதவூரான் பரிகள் – பகுதி 8 – இரா.முருகன்

    மௌனத் திரைப்படத்தின் பீஷ்ம பிதாமகர் அல்லது முன்னத்தி ஏரான செர்ஜி ஐஸென்ஸ்டின் பெயர் சொன்னதும் அவரது திரைக் காவியமான போர்க்கப்பல் பொடம்கின் Battleship Potemkin  படம் தான் சினிமா ஆர்வலர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும். கொஞ்சம் யோசித்து கெ விவா மெக்ஸிகோ…

    மேலும் வாசிக்க
  • நேர்காணல்கள்

    “பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது”- சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல்

      சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இள வயது முதல் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருபவர். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டு தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கும்…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

      “தன்னை எழுதுதல்” – பாரததேவியின் ‘நிலாக்கள் தூர தூரமாக’ நாவல் வாசிப்பனுபவம்

    நிலாக்கள் தூரதூரமாக என்ற தன்வரலாற்றுப் புதினம் உண்மையான வாழ்விற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த சாயலுமில்லாத கதைசொல்லியின் உண்மையான குரலைப் போன்ற மொழிநடை. அம்மாக்களின் மடியில் படுத்துக்கொண்டு அவர்களின் கதையை அவர்களே சொல்லக் கேட்பதைப் போன்ற அனுபவத்தை இப்புதினத்தை வாசிக்கையில் அடைவோம்.…

    மேலும் வாசிக்க
Back to top button