இணைய இதழ் 93
-
Apr- 2024 -16 April
கணங்கள் – ஹேமா ஜெய்
அன்று அதிகாலை வெகு சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது கண்மணிக்கு. நன்கு உறங்கவேண்டுமென்றுதான் கணவனுக்கும் மகளுக்கும் நேற்றிரவே உணவு சமைத்து கட்டியும் வைத்திருந்தாள். எனினும் இப்போது சுணக்கம் சற்றுமில்லாத, மஞ்சள் வெளிச்சம் படிந்த வானம் போல உறக்கம் சுத்தமாகத் துலங்கியிருந்தது. இது வழக்கம்தான்.…
மேலும் வாசிக்க -
16 April
அழகிய பெரியவன் கவிதைகள்
ஒரு சிறு சிமிர்போதும் அமர்வதற்கு ஒரு சிறு கிளைபோதும் கூட்டுக்கு ஒரு சிறு இலைபோதும் குழந்தைக்கு கிட்டுமாபறவை வாழ்க்கை? **** புவி மேல்கவியும்வான் கண்ணாடிக்குடுவையில் படிந்திருக்கிறதுமேகச் சாம்பல் ஒரு மயில் கொன்றைசிவந்த பூப்பிழம்புகளால்மூட்டுகிறது தீயை மண்ணறை விடுத்துமொலு மொலுவெனஎழும்பும்ஈசல் விட்டில்கள்ஒளிப்பூக்களைஅண்டப் பறக்கின்றன…
மேலும் வாசிக்க -
16 April
க.பிரபுசங்கர் கவிதைகள்
தோழியொருத்தியின் குட்டி மகள்பூப்பெய்து விட்டாளென்றநற்செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதுஇன்றைய நாளின் முதலழைப்புநேற்றைக்குத்தான்மகள் பிறந்திருக்கிறாளெனபுன்னகை வழிய சேதி சொல்லியதாகநினைவுப்படுத்துகிறதுகணக்குகள் தெரியாத மூளைதளிருக்கும் பூவுக்குமானஇடைவெளியில்அவள் எடை கூடித் தளர்ந்திருக்கிறாள்நான் நரை கூடி வளர்ந்திருக்கிறேன்வாழ்வு அதே இடத்தில்சுழன்று கொண்டிருக்கிறது. **** சத்தியமாகச் சொல்கிறேன்இந்தக் கணம் வரைமிக இயல்பாகத்தானிருந்தேன்…
மேலும் வாசிக்க -
16 April
இளன் – பெருமாள்முருகன்
பூனையைக் கவனித்துக்கொள்ளும் வேலை கபிலனுக்குப் புதிது. தயக்கமாய் இருந்தாலும் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்பதால் ஒத்துக்கொண்டான். பத்து நாட்கள் அக்குடும்பம் வெளியூர் செல்கிறது. யாருமற்ற வீட்டுக்கு இரவுக் காவல் என்றால் அவனுக்குப் பழக்கமானது. இந்த வீட்டிலோ பூனையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.…
மேலும் வாசிக்க -
16 April
கிளை தாவும் வேதாளங்கள் – ஜனநேசன்
‘அவசரப்பட்டு தப்பான தொழிலில் இறங்கிட்டோமோ’, சேகர் மனதுக்குள் குமைந்தான். ஜீன்ஸ் பேன்ட்டும், டெனிம் சர்ட்டுமாக செமையாக உலாத்தினோம்; கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து உலகையே கலக்கினோம். இன்னும் ரெண்டுமாசம் பொறுத்திருந்திருக்கலாம். அவசரப்பட்டு காய்கறி வண்டி தள்ளி விற்று வயிற்று பிழைப்பை ஒட்டுறதுமில்லாமல், ஒரு…
மேலும் வாசிக்க -
16 April
மலரினும் மெலிது – தேஜூ சிவன்
ஓவியாஆஆஆஆ. சசியின் குரல் 95dBஐத் தாண்ட அவள் மேஜை மீதிருந்த போன்சாய் மர இலைகள் மெலிதாக நடுங்கின, கூடவே கண்ணாடி டம்ளரில் நிரம்பியிருந்த நீரில் சின்ன சின்ன வட்டங்கள் தோன்றின. ஹே சசி.. ஏன் இப்படி காட்டுக்கத்தல் போடறே சொல்லி அருகில்…
மேலும் வாசிக்க -
16 April
பாத்திரங்கள் – கா.ரபீக் ராஜா
பேருந்து நிலையத்தின் அன்றைய நாள் முடிவில் நடக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. சுகந்தி நன்கு கால் நீட்டிக்கொண்டு போயிலை மென்று கொண்டிருந்தாள். அவளை பாபு சற்று கிண்டல் தொனியில் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை குறித்த முழு சந்தேகம் சுகந்தி அறிவாள்.…
மேலும் வாசிக்க -
16 April
மணல் – இத்ரீஸ் யாக்கூப்
அதிகாலை மணி நான்கு இருக்கும். செய்யது, படலைத் திறந்துக்கொண்டு வீட்டின் முன்முற்றம் வழியே உள்ளே நுழைவதைக் கண்டதும், முத்துப்பொண்ணு இளம் காற்றுத் தீண்டி வெடித்தெழுந்த பஞ்சாக அவனை வரவேற்க வாசலுக்கு ஓடி வந்தாள். “வந்திட்டியளா மச்சா..! இன்னைக்கே பெருநாள்ங்கிறதால, அறிவிப்புக் கேட்டு…
மேலும் வாசிக்க -
16 April
அம்பர் சர்க்கா – பத்மகுமாரி
பேச்சி எதிரே கிடத்தப்பட்டிருந்த தனக்கு நெருக்கமான உடலை கண்கொட்டாமல் பார்த்தபடி உறைந்து அமர்ந்திருந்தாள். சுற்று 1 – 1963 “அம்பர் சர்க்கா சுத்த சொல்லித் தராங்களாம். நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்திடுறோம்த்த” வள்ளி, பேச்சியின் அம்மாவை கரைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவின்…
மேலும் வாசிக்க -
16 April
நெறிக்கட்டி – சவிதா
முதலில் சொட்டுச் சொட்டாய் வந்தது போலிருந்தது. அப்புறம் நான்கைந்து துளைகளிலும் பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது. நைட்டி முழுவதும் பாலால் நனைந்திருந்தது. ஒரே பால்வீச்சம். உள்ளைங்கையால் வலது மார்பைப் பொத்திக்கொண்டாள். கையில் பிசுபிசுப்பு. தொடைகளிலும் அதேபோல் தோன்ற, பொருந்தாமல் கண்களைத் திறந்த பிறகுதான் கனவென்றே…
மேலும் வாசிக்க