கட்டுரைகள்
-
Apr- 2024 -1 April
வான்கோவின் இரவு – சரத்
வான்கோ, தற்கொலை செய்து கொண்டபோது அவருக்கு வயது வெறும் 37. ‘போஸ்ட் இம்ப்ரெஷனிஷம் வகை ஓவியங்களின் முன்னோடி’ என இன்று கொண்டாடப்படும் வான்கோ, வாழ்ந்த காலத்தில் அதற்குண்டான எந்தப் பலனையும் அனுபவிக்காமலேயே இறந்திருக்கிறார். இன்று கோடிக் கணக்கில் விலை போகும் அவருடைய…
மேலும் வாசிக்க -
Mar- 2024 -16 March
குடக்கூத்து – நாவல் வாசிப்பனுபவம் – கவிஞர் இரா.மதிபாலா
ஒரு காலகட்டத்தில் மண்ணின் மணம் நிறைந்து வீசிய கிராமப்புறத்து மதிப்புமிகு கலைகள் தற்போதைய காலச்சூழலால் அவற்றின் மீதான தாக்கங்களால் ஏற்பட்டுள்ள நிலையில், கரகாட்டக் கலைஞர்கள் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் நாதஸ்வரம், மேளம் வாசிக்கும் கலைஞர்கள் வாழ்வினை கால வரிசையோடு அந்த கலைகளின்…
மேலும் வாசிக்க -
16 March
மொழியின் மாயாஜாலம் சிருஷ்டிக்க முயலும் இம்பர் ராஜ்ஜியங்கள் – நந்தாகுமாரன்
2024ஆம் ஆண்டு நான் முழுவதும் வாசித்து முடித்த முதல் புத்தகம் ராஜேஷ் வைரபாண்டியனின் ‘அறல்’ சிறுகதைத் தொகுப்பு. வித்தியாசமான முன்னட்டைப் படத்துடன் நம்மை வரவேற்கும் இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. பின்னட்டையில் இந்தத் தொகுப்பு குறித்த ‘ப்ளர்ப்’ ஓரளவு…
மேலும் வாசிக்க -
2 March
சிறுகதைகளில் முடிவு – ந.சிவநேசன்
ஒரு சிறுகதையின் முடிவு எவ்வாறு இருக்கவேண்டும்? ட்விஸ்டுகளை அடுக்கி வாசகனின் எண்ண அலையை திருப்பிவிடுவதாக அமைய வேண்டுமென பெரும்பாலோர் கருதுகிறார்கள். ஆனால் சிறுகதை எழுதப்படும் எல்லாச் சூழலிலும் அது அவசியமாகிறதா என்பதே கேள்வி. தமிழ்ச்சூழலில் கையாளப்படும் சிலவகையான தேர்ந்த முடிவுகளை சில…
மேலும் வாசிக்க -
2 March
பத்மகுமாரியின் ‘நட்சத்திரம்’ சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம் – மன்னர்மன்னன் குமரன்
கதைகள் முழுக்கப் பெண்கள்; அதிலும் அம்மாக்கள். மனிதர்களின் இருப்பு, பறந்துவிடாமல் இருக்க லேசான கனத்தை தாள்களின் மீது கொடுக்கிறது. முழுவதும் வாசித்து முடித்து நிறைய மனிதர்களைச் சந்தித்த பின் என் மனம் பற்றிக் கொண்டதென்னவோ இதைத்தான்; ‘தரிசனம்’ கதையில், ‘சந்தோசத்தைக் கொண்டு…
மேலும் வாசிக்க -
Feb- 2024 -17 February
கவிஞர் ந.பெரியசாமியின் ‘அகப்பிளவு’ கவிதைத் தொகுப்பு குறித்து சுஜாதா செல்வராஜின் வாசிப்பனுபவம்
காதல், காமம், பிரிவு, தவிப்பு , ஊடல் இவற்றின் சுவையை எவ்வளவு பேசினாலும் தீராது. சொல்லச் சொல்ல இன்னும் இன்னும் என்று எஞ்சி நிற்கும் அற்புத உணர்வுகள் அவை. பொதுவாக நாம் காதலை எழுதுவதைப் போல காமத்தை எழுதத் துணிவதில்லை. கத்தி…
மேலும் வாசிக்க -
16 February
இத்ரீஸ் யாக்கூப்பின் ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் வாசிப்பனுபவம் – ஆமினா முஹம்மத்
கோரமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நடக்கும் சம்பவங்களும் ஆட்சியதிகாரங்கள் நிகழ்த்தும் ஆதிக்கங்களும் காட்டிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் மாமன் மச்சானாய் மதபேதமின்றி பழகிய மக்கள் கூட்டம் சகஜமாய் நம்மில் இருந்தனர். இப்போதெல்லாம் வேறுவேறு மதத்தைச் சார்ந்தவர்களை நண்பனாக கொண்டிருப்பதே பெரும் சாதனையாக, வியப்புக்குரிய…
மேலும் வாசிக்க -
1 February
கறையான்; வங்காள நாவல் வாசிப்பு அனுபவம் – கா. முஜ்ஜம்மில்
இந்த வருட வாசிப்பில் முதல் நாவலாக வங்காள எழுத்தாளர் சீர்சேந்து முகோபாத்யாய அவர்கள் எழுதிய கறையான் என்ற நாவலை வாசித்தேன். மொழிபெயர்ப்பாளர் சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டு இருக்கும் இந்த நாவலை…
மேலும் வாசிக்க -
Jan- 2024 -21 January
பானையைத் தாண்டிய மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வியல் – பிரேம் முருகன்
வருடந்தோறும் பொங்கல் தொகுப்பில் ‘மண் பானை’ வழங்கி அதன் மூலம், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஊக்கமளித்தும் பொருளீட்டவும் வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் போராட்டங்களும் குறித்த செய்திகள் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. மறுபுறம், மண்பாண்டங்களை வைத்து தொழில்நுட்ப ரீதியாக தொல்லியல்…
மேலும் வாசிக்க -
21 January
எழுத்தாளர் மாதவராஜின் ‘க்ளிக்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஆமினா முகம்மது
“எனக்கு உங்க கையெழுத்துப் போட்டுத் தாங்க” என நேரடியாக எழுத்தாளரிடம் அருகில் நின்று வாங்கிய புத்தகம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஓரிரு வார்த்தை கூட பேசாத நிலையிலும் அவர் இயல்பின் மீது மரியாதை கூடியிருந்தது பிரத்யேகக் காரணம். ‘க்ளிக்’ – தோழர்…
மேலும் வாசிக்க